விபத்துகளை தடுக்கும் பொருட்டு, தியாகதுருகத்தில் பாவந்தூர் சாலையோர மரங்களில், இரவில் ஒளிரும் தன்மை கொண்ட பிரதிபலிப்பான்களை காவல் துறையினர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் காவல் நிலைய ஆய்வாளர் குமார் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சூ.பாலமுரளி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் தியாகதுருகத்தில் இருந்து பாவந்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள மரங்களில் இந்த பிரதிபலிப்பான்களை பொருத்தினர். இதன் மூலம், இரவு நேரங்களில் இந்த சாலையில் வாகன விபத்து பெருமளவு தவிர்க்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.