பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் கீழ், 2 பழங்குடியினர் மாணவர் விடுதியும், ஒரு பழங்குடியினர் தொழில் பயிற்சி மாணவர் விடுதியும் என மொத்தம் 
3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் தங்கி, கல்வி பயிலும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், 4 இணைச் சீருடைகள், 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும். 
இந்த விடுதிகளில் சேருவதற்கு மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்று ஜூன்15-ஆம் தேதிக்குள்ளும், தொழில் பயிற்சி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஜூலை 
10-ஆம் தேதிக்குள்ளும், பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி, கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com