விக்கிரவாண்டி அருகே அபகரிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தரக் கோரி முதியவர் ஒருவர், எஸ்.பி. அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.
விக்கிரவாண்டியை அடுத்த செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்(60) என்பவர் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: எனது தாத்தா, தந்தை ஆகியோருக்குச் சொந்தமாக செம்மேடு, வெள்ளேரிப்பட்டு ஆகிய கிராமங்களில் சுமார் 5 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலங்கள் அனைத்தும், வாரிசான எனக்கு சொந்தமானதாகும். ஆனால், இந்த நிலங்களை, வேறு சிலர் அபகரித்துள்ளனர். ஆகவே, அந்த நிலங்களை மீட்டுத் தர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.