இளம்பெண் பலாத்காரம்: 4 இளைஞர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம்,  கண்டமங்கலம் அருகே காதலரைத் தாக்கி, இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய


விழுப்புரம் மாவட்டம்,  கண்டமங்கலம் அருகே காதலரைத் தாக்கி, இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 இளைஞர்களையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கண்டமங்கலம் அருகே விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயது பெண், அருகே புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், உடன் வேலை பார்த்து வந்த புதுவை சூரமங்கலத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்தனர்.
அண்மையில்,  இருவரும் கண்டமங்கலத்தை அடுத்த பள்ளியநேலியனூர் ரயில்வே கடவுப் பாதை அருகே உள்ள பள்ளிச்சேரி வயல்வெளியில் பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது, மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த 4 இளைஞர்கள், காதலரைத் தாக்கிவிட்டு, இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனராம்.
இளம்பெண்ணின் கூச்சல் 
கேட்டு அப்பகுதியினர் ஓடி வரவே, அந்த 4 இளைஞர்களும் தப்பிவிட்டனர். காயமடைந்த அந்த இளம் பெண்ணை, அப்பகுதியினர் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் துணை கண்காணிப்பாளர் திருமால், கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு,  உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் அய்யனாரை (25) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து,  அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சேது(22), பெருமாள் மகன் அழகுவேல்(23), சரவணன் மகன் அய்யனார்(22) ஆகியோரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com