விழுப்புரம் கோட்டாட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், காத்திருப்போர் பட்டியலுக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டார். 

விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், காத்திருப்போர் பட்டியலுக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டார். 
விழுப்புரம் கோட்டாட்சியராக கடந்த 20.9.2018 முதல் பணியாற்றி வந்தவர் குமாரவேல். 
இவர், காத்திருப்போர் பட்டியலுக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, குமாரவேல் அந்தப் பணியில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
கடந்த 9 மாதங்களாக விழுப்புரம் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த நிலையில், நான் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளேன். இதற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்தான் காரணம். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com