திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலை-அறிவியல் கல்லூரியில் 2019-2020ஆம் கல்வியாண்டுக்கான, இளநிலை பட்டப்படிப்புகளுக்குரிய இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் கா.பு.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அறிவிப்பில் வருகிற 27ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல்,புவியமைப்பியல், கணினி அறிவியல், தாவரவியல், புள்ளியியல் பாடப் பிரிவுகளுக்கும், 28ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வரலாறு, ஆங்கிலம், தமிழ், வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.