திருக்கோவிலூர் என்ஜிஜிஓ நகரில் உள்ள கிளை நூலகத்தில் புரவலர் சேர்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். நல்லாசிரியர் சு.இராஜேந்திரன், கவிஞர் மு.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ஜெ.பானு வரவேற்றார்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆ.பர்னபாஸ், திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் கவுஸ் சாதிùக்ஷரிப் ஆகியோர் நல்நூலகர் மு.அன்பழகனிடம் தலா ரூ.ஆயிரம் செலுத்தி புரவலர்களாக இணைந்தனர் நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.