சின்னசேலம் அருகே விஷ சாராயம் விற்பனை செய்ததாக முதியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சின்னசேலம் அருகே பைத்தந்துறை கிராமத்தில் அரசுப் பள்ளியின் பின்புறம் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை நடத்தியபோது, 3 லாரி டியூப், பிளாஸ்டிக் கேனில் விஷ சாராயத்தை வைத்து முதியவர் ஒருவர் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பைத்தந்துறை தெற்கு தெருவைச் சேர்ந்த துடுக்கு சேகர் (எ) சேகர் (59) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 93 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.