கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த பரங்கிநத்தம், மல்லியப்பாடி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரங்கிநத்தம், மல்லியப்பாடி கிராமங்களில் நடைபெற்ற முகாம்களில் புதுப்பாலப்பட்டு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் பிரியா தலைமையிலான மருத்துவர்கள் 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர்.
கால்நடை உதவி ஆய்வாளர்கள் சிங்காரவேல், ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.