வளவனூர் உதவி காவல் ஆய்வாளர், பத்திரப்பதிவு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் செய்யப்பட்டது.
வளவனூர் அருகேயுள்ள தொட்டியாம் தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தனது தங்கைக்கும், வளவனூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு கடலூர், திருவந்திபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயதை அடையவில்லை. இந்தத் திருமணத்துக்கு வளவனூர் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உடந்தையாக இருந்துள்ளார். ஆகவே, இது தொடர்பாக அவர் மீதும், கடலூர் திருவந்திபுரம் பத்திரப்பதிவு அலுவலர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.