3 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல், சூதாட்டத்துக்கு உடந்தையாக இருந்ததாக 3 போலீஸாரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.


விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல், சூதாட்டத்துக்கு உடந்தையாக இருந்ததாக 3 போலீஸாரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
செஞ்சி காவல் நிலையக் காவலர்கள் கார்த்திக், கோவிந்தன் ஆகியோர் அந்தப் பகுதியில் மணல் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்படுவதாக புகார் எழுந்தது.
இதேபோன்று, திருக்கோவிலூர் காவல் நிலையக் காவலர் முத்துக்குமார், அந்தப் பகுதியில் சூதாட்டம் நடப்பதற்கு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.
இந்தப் புகார்களின் அடிப்படையில், கார்த்திக், கோவிந்தன், முத்துக்குமார் ஆகிய 3 போலீஸாரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com