நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் விநாயகம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் பல்லகச்சேரி கிராமத்தில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 பல்லகச்சேரி குப்பத்து மண் சாலை அருகே தட்சிணாமூர்த்தி மகன் சின்னத்தம்பி வயல் பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்று கொண்டிருந்தாராம். அவரை போலீஸார் பிடித்து விசாரித்ததில், அந்த நபர் சங்கராபுரம் வட்டம், மையனூரைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் ஆன்ட்ரோகெவின் என்பதும் அவர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
 இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com