பாலியல் வன்கொடுமை: போலி சாமியார் கைது

திண்டிவனம் அருகே மாந்த்ரீகம் செய்வதாகக் கூறி, செவிலியர் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனம் அருகே மாந்த்ரீகம் செய்வதாகக் கூறி, செவிலியர் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.
 திண்டிவனம் அருகேயுள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி (எ) செல்வமணி(40) (படம்). இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
 இந்த நிலையில், இவர் மாந்த்ரீகம், பில்லி சூனியம் நீக்குவதாகக் கூறி திண்டிவனம் அருகே உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
 இவரிடம், கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், வடமணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை சரி செய்து தருமாறு கேட்டார்.
 இதையடுத்து, உங்கள் ஊரில் கோயில் கட்டினால் பிரச்னையை தீர்த்து விடலாம் என்று அவரிடம் செல்வமணி தெரிவித்தார். ஆனால், கோயில் கட்டும் போது, உன் வீட்டில் உனது மகள் இருக்கக் கூடாது. உன் மகளை எனது வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு செல்வமணி கூறினார்.
 வேறு வழியில்லாமல், செவிலியர் கல்லூரியில் படித்து வரும் தனது 19 வயது மகளை அனுப்பி வைத்தார்.இந்த நிலையில், செல்வமணி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மாணவியை மிரட்டினாராம்.
 மாணவி தனது தந்தையிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தந்தை திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், கடந்த 21-ஆம் தேதி செல்வமணி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சாமியாருக்கு உதவியாக, அவரது வீட்டில் இருந்த ஹேமா (40) என்ற பெண்ணையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com