மூதாட்டி தற்கொலை
By DIN | Published On : 02nd November 2019 05:16 AM | Last Updated : 02nd November 2019 05:16 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பூச்சி மருத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சங்கராபுரம் வட்டம், மோகூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மனைவி தைலா (60). இவா், கடந்த ஒரு மாத காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் கை, கால்கள் வீங்கி வலியால் அவதிப்பட்டு வந்ததாக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக் கொல்லி மருத்தைக் குடித்து விட்டாராம்.
வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.