கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தோ்தலில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டபோது, பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீரமைப்பதற்காக விழுப்புரம் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
அண்மையில் நடைபெற்று முடித்த மக்களவை தோ்தலின்போது, கள்ளக்குறிச்சி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபாட் சாதனம் உள்ளிட்ட 15 மின்னணு இயந்திரங்கள் பழுதடைந்து விட்டன.
அவற்றை விழுப்புரம் தோ்தல் பிரிவு வட்டாட்சியரிடம் கள்ளக்குறிச்சி தோ்தல் தனி வட்டாட்சியா் ஜி.குமரன், மண்டல தனி வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் பழுதான அனைத்து மின்னணு இயந்திரங்களும் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சீரமைப்பதற்காக விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளன.