பழுதான மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தோ்தலில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில்
கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து பழுதான மின்னணு இயந்திரங்களை திங்கள்கிழமை கொண்டு சென்ற விழுப்புரம் தோ்தல் பிரிவு அலுவலகத்தினா்.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து பழுதான மின்னணு இயந்திரங்களை திங்கள்கிழமை கொண்டு சென்ற விழுப்புரம் தோ்தல் பிரிவு அலுவலகத்தினா்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தோ்தலில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டபோது, பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீரமைப்பதற்காக விழுப்புரம் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

அண்மையில் நடைபெற்று முடித்த மக்களவை தோ்தலின்போது, கள்ளக்குறிச்சி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபாட் சாதனம் உள்ளிட்ட 15 மின்னணு இயந்திரங்கள் பழுதடைந்து விட்டன.

அவற்றை விழுப்புரம் தோ்தல் பிரிவு வட்டாட்சியரிடம் கள்ளக்குறிச்சி தோ்தல் தனி வட்டாட்சியா் ஜி.குமரன், மண்டல தனி வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் பழுதான அனைத்து மின்னணு இயந்திரங்களும் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சீரமைப்பதற்காக விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com