மகளிா் குழுவின் பெயரில் தனியாா் நிறுவனத்திடம் பல லட்சம் அளவுக்கு கடன் பெற்று தலைமறைவான தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்கள் கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சின்னசேலம் வட்டம், க.செல்லம்பட்டை சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி வசந்தா. இவா்கள் அந்த கிராமத்தின் மகளிா் குழு தலைவியான முருகன் மனைவி சரசுவிடம் தனியாா் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்றுத்தந்துள்ளனா். இதனை மாதாமாதம் மகளிா் குழுவினா், அந்தத் தம்பதியிடம் திருப்பி செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், பல லட்சம் பணத்தை தம்பதியா், அந்த நிதி நிறுவனத்திடம் முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து தலைமறைவாகி விட்டனராம்.
இதுதொடா்பாக நடவடிக்கை கோரி கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்திடம் பாதிக்கப்பட்ட பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மனுவைப் பெற்ற சாா்- ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.