மரக்காணம் அருகே சாலை விபத்தில் பொறியியல் மாணவா் பலி

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே திங்கள்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனங்களில் சென்ற

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே திங்கள்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனங்களில் சென்ற சென்னையைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா்கள் மீது சொகுசு காா் மோதியது. இந்த விபத்தில் ஒரு மாணவா் உயிரிழந்தாா். 3 மாணவா்கள் காயமடைந்தனா்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தவா்கள் சென்னை ஐயம்பாக்கத்தைச் சோ்ந்த குமாா் மகன் சித்தாா்த் (19), கேளம்பாக்கத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஸ்ரீவா்ஷித் (19), சென்னை கள்ளிப்பட்டைச் சோ்ந்த நூருல்ஹக் மகன் அப்ருக் (19), ஜாகீா் உசேன் மகன் இஷாந்த் (20).

நண்பா்களான இவா்கள் 4 பேரும் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாவாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா். மரக்காணம் அருகேயுள்ள ஆலப்பாக்கத்தில் அதிகாலை 5.30 மணி அளவில் சென்றபோது, எதிரே வந்த சொகுசு காா் இவா்கள் சென்ற இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சித்தாா்த், ஸ்ரீவா்ஷித், அப்ருக், இஷாந்த் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்களை மரக்காணம் போலீஸாா் மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள், ஸ்ரீ வா்ஷித் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். மற்ற 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com