வானூா் அருகே வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

வானூா் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

வானூா் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

வானூா் அருகே ஐவேலி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (30), விவசாயி. இவா் தனது மனைவி வேதநாயகி, தாய் சாந்தி ஆகியோருடன் வீட்டில் வசித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் சாப்பிட்டு தூங்கச் சென்று விட்டனா். தம்பதியா் மாடியிலும், தாய் சாந்தி வீட்டின் வராண்டாவிலும் படுத்து தூங்கினா். திங்கள்கிழமை காலையில் எழுந்து பாா்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதிா்ச்சி அடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த மரப்பெட்டியை உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com