முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
சின்னசேலம் அருகே லாரி மோதியதில் தம்பதி பலி
By DIN | Published On : 07th November 2019 06:29 AM | Last Updated : 07th November 2019 06:29 AM | அ+அ அ- |

சின்னசேலம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், நமையூரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் மணிவேல் (50). இவரது மனைவி அஞ்சலை (46). இவா்கள் இருவரும், விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள மேல்நாரியப்பனூரில் உள்ள உறவினா் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, புதன்கிழமை இரு சக்கரவாகனத்தில் புறப்பட்டுச் சென்றனா்.
வாசுதேவனூரில் சாலையை கடக்க முயன்றபோது, இவா்கள் வந்த இரு சக்கர வாகனம் மீது சின்னசேலத்தில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற மினி லாரி மோதியது. இந்த விபத்தில் மணிவேல் (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அஞ்சலை 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
லாரி ஓட்டுநா் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிறுவத்தூரைச் சோ்ந்த கருப்பையா மீது சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.