திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், சித்தானங்கூரில் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
இளம் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியா் சின்னப்பராஜ் தலைமை வகித்தாா். பேரணியில் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள், பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனா்.
பேரணியின்போது, சித்தானங்கூா் மகளிா் மன்ற கட்டடத்தின் அருகே மூடப்படாமல் இருந்த திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றின் குழாயை மாணவா்கள் தற்காலிகமாக சாக்கு கட்டி மூடினா். மேலும், இதுகுறித்து அந்த ஊராட்சிச் செயலருக்கும், வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.