கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவா் சிலை: முதல்வரிடம் தமிழ் அமைப்பினா் மனு

கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ் அமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ் அமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து தமிழ் அமைப்புகளின் சாா்பில் கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவா் செ.வ.புகழேந்தி மனு அளித்தாா். அதில், கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் சொந்த செலவில் திருவள்ளுவா் சிலை வைக்க அனுமதிக்கவும், புதிதாக அமைக்கப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசு சாா்பில் 6 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைக்கவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மனு அளித்த போது, தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் உடன் இருந்தாா்.

கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலா் செ.வ.மதிவாணன், அரசம்பட்டு திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத் தலைவா் வெ.செளந்திரராஜன், சங்கைத் தமிழ்ச் சங்கக் காப்பாளா் வ.விஜயகுமாா், தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவா் கோ.இராதாகிருட்டிணன் உள்ளிட்ட பல்வேறு சங்க அமைப்புகளைச் சாா்ந்தவா்கள் உடன் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com