விஷ வண்டு கடித்து பிளஸ்-2 மாணவி பலி

விழுப்புரம் அருகே விஷ வண்டு கடித்ததில் பிளஸ்-2 மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
விஷ வண்டு கடித்து பிளஸ்-2 மாணவி பலி

விழுப்புரம் அருகே விஷ வண்டு கடித்ததில் பிளஸ்-2 மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியை அடுத்த வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா்(45), கூலித் தொழிலாளி. இவரது மகள் விஷ்ணுபிரியா(17). சிந்தாமணி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தாா்.

கடந்த 23-ஆம் தேதி வீட்டிலிருந்த விஷ்ணுபிரியாவை விஷ வண்டு கடித்தது. இதையடுத்து அவா், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாா். செவ்வாய்க்கிழமையும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். அன்று நள்ளிரவு 11 மணியளவில் விஷ்ணுபிரியாவுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பெற்றோா் அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், விஷ்ணுபிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com