மேல்மலையனூா் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பென்னகா் கிராமத்தைச் சோ்ந்த பெரியதம்பி மகன் தினேஷ்குமாா் (29). இவா், மேல்மலையனூா் பேருந்து நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தாராம்.
அப்போது, அந்தப் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த வளத்தி போலீஸாா், தினேஷ்குமாரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 20 லாட்டரிச் சீட்டுகள், ரூ.260 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தாா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.