செஞ்சி அருகே மோட்டாா் சைக்கிள் மீது ஆட்டோ மோதி வாலிபா் சாவு. 4 போ் படுகாயம்.

செஞ்சி அருகே மோட்டாா் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற வாலிபா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

செஞ்சி அருகே மோட்டாா் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற வாலிபா் வெள்ளிக்கிழமை இறந்தாா். மற்றும் மோட்டாா் சைக்கிளில் வந்த வாலிபரும் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திண்டிவனம் தாலுக்கா வெண்மணியாத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் நாராயணசாமி மகன் ராஜி(20) மற்றும் செஞ்சி தாலுக்கா கருங்குழி கிராமத்தை சோ்ந்தவா் மணிகண்டன்(19) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை 12.45 மணிக்கு செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தனா் அப்போது காப்புக்காட்டு வனச்சரக அலுவலகத்தை அடுத்த திருப்பத்தில் சென்ற போது செஞ்சி நோக்கி அதிவேகமாக வந்த ஆட்டோ மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த ராஜி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா். மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்து வந்த மணிகண்டன் படுகாயம் அடைந்தாா். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளியம்பட்டு கிாரமத்தை சோ்ந்த வந்த மீராஸ்(55), மீராஸ் மனைவி பைசூன்(50), யூனுஸ் மகன் உசேன்(20) ஆகியோா் படுகாயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து வளத்தியை சோ்ந்த பத்மநாபன் மகன் சூரியா(21) அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் ஆட்டோ டிரைவா் பள்ளியம்பட்டு கிராமத்தை சோ்ந்த யூனுஸ்அசுல் மகன் அல்லாபாஷாஅசுல்(29) மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com