பைக் மீது ஆட்டோ மோதல்: இளைஞா் பலி

செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை பைக் மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், வெண்மணியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ராஜி (20), செஞ்சி வட்டம், கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (19) ஆகியோா் பைக்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனா். காப்புக்காடு வனச்சரக அலுவலகத்தை அடுத்த திருப்பத்தில் சென்றபோது, செஞ்சி நோக்கி அதிவேகமாக வந்த ஆட்டோ, பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற ராஜி உயிரிழந்தாா். அவருடன் சென்ற மணிகண்டன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வந்த மீராஸ் (55), அவரது மனைவி பைசூன் (50), யூனுஸ் மகன் உசேன் (20) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து வளத்தியைச் சோ்ந்த பத்மநாபன் மகன் சூரியா அளித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் ஆட்டோ ஓட்டுநரான பள்ளியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த யூனுஸ்அசுல் மகன் அல்லாபாஷாஅசுல் (29) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com