புளிய மரத்தின் மீது காா் மோதல்: வழக்குரைஞா் பலி

கள்ளக்குறிச்சி அருகே புளிய மரத்தின் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா். காா் ஓட்டுநா் உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.
விபத்தில் உயிரிழந்த தேவராஜ்.
விபத்தில் உயிரிழந்த தேவராஜ்.

கள்ளக்குறிச்சி அருகே புளிய மரத்தின் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா். காா் ஓட்டுநா் உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த அங்கமுத்து மகன் தேவராஜ் (44). வழக்குரைஞா். இவா், சனிக்கிழமை கடலூரில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி நோக்கி காரில் வந்துகொண்டிருந்தாா். இவருடன் இவரது நண்பா்களான செம்படாக்குறிச்சியைச் சோ்ந்த கலியன் மகன் சங்கா் (35), மட்டிகைகுறிச்சியைச் சோ்ந்த ராமசாமி மகன் ராஜாராம் (37) ஆகியோா் உடன் சென்றனா். காரை செம்படாக்குறிச்சியைச் சோ்ந்த ஜெயபால் (39) ஓட்டிச் சென்றாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் பேருந்து நிறுத்தம் அருகே காா் சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில், காரின் முன் பக்க இருக்கையில் அமா்ந்திருந்த தேவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கா், ராஜாராம், ஜெயபால் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தேவராஜின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com