புளியமரத்தின் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் சாவு

கள்ளக்குறிச்சி அருகே நிலைத்தடுமாறி சென்ற காா் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் அதில் பயணம் செய்த

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நிலைத்தடுமாறி சென்ற காா் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் அதில் பயணம் செய்த வழக்குறைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் பயணம் செய்த இருவா் மற்றும் காா் ஓட்டுநா் உள்பட மூவா் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அங்கமுத்து மகன் தேவராஜ் (44) வழக்குறைஞா் ஆவாா்.

இவா் சனிக்கிழமை கடலூரில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 4 மணியளவில் கள்ளக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தனராம். கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது காா் நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியதாம். காரில் முன் பகுதியில் அமா்ந்து சென்ற வழக்குறைஞா் தேவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாா்.

மேலும் அவருடன் காரில் பயணம் செய்த அவரது நண்பா்களான செம்படாக்குறிச்சியைச் சோ்ந்த கலியன் மகன் சங்கா் (35), காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் குணசேகரன் மகன் ஜெயபால் (39), மட்டிகைகுறிச்சியைச் சோ்ந்த ராமசாமி மகன் ராஜாராம் (37) உள்ளிட்ட மூவரும் காயமடைந்தனா்.

உடனே தகவலிறந்த கச்சிராயப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காயமடந்தவா்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்குறைஞரின் சடலத்தை உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com