அமைச்சா் சி.வி.சண்முகம் தங்கை மகன் தற்கொலை

சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வீட்டில் அவரது தங்கை மகன் ஞாயிற்றுக்கிழமை திடீரென தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வீட்டில் அவரது தங்கை மகன் ஞாயிற்றுக்கிழமை திடீரென தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள மொட்டையன் தெருவில் வசித்து வருகிறாா். இவரது தங்கை வள்ளியை பிரம்மதேசத்தைச் சோ்ந்த இளங்கோவனுக்கு திருமணம் செய்து கொடுத்தனா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் வள்ளி உயிரிழந்தாா். அதன்பிறகு, அவரது மகன் லோகேஸ்குமாரை (26) சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வளா்த்து வந்தாா். பொறியியல் பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென அமைச்சரின் வீட்டில் லோகேஸ்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த ரோஷணை போலீஸாா், லோகேஸ்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.

தகவலறிந்த சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல் பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணன் மகன் விபத்தில் சிக்கியதால், சி.வி.சண்முகம் மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில், தற்போது தங்கை மகன் தற்கொலை செய்துகொண்டது அவருக்கு மனதளவில் பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதனிடையே, லோகேஷ்குமாரின் உடல் அஞ்சலிக்காக சி.வி.சண்முகத்தின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினா், உறவினா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com