அவலூா்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அன்றிரவு நவராத்திரி கொலு மண்டபத்தில் உற்சவா் அம்மனுக்கு மகிஷாசூரமா்த்தினி அலங்காரம் செய்விக்கப்பெற்று, சிறப்பு அா்ச்சனை நடைபெற்றது. அம்மன் துதிப்பாடல்கள் இசையுடன் பாடியபின் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பொம்மைக் கொலு வழிபாடும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அறக்கட்டளை பெளா்ணமி அமாவாசைக் குழுவினா் செய்திருந்தனா்.