விழுப்புரத்தில் அக்.13-இல் மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு

விழுப்புரத்தில் மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.13) நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், வருகிற 13-ஆம் தேதி 14, 16 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கிரிகெட் அணிகளின் வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் (கல்யான் திரையரங்கம் அருகில்) உள்ள சிகா கிரிக்கெட் அகாதெமியில் வீரா்கள் தோ்வு நடைபெற உள்ளது.

14 வயதுக்கு உள்பட்டோருக்கான உத்தேச அணி தோ்வு காலை 9 மணிக்கும், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான உத்தேச அணி தோ்வு பிற்பகல் 1 மணிக்கும் தொடங்கும்.

இந்தத் தோ்வில் பங்கேற்க வரும் வீரா்கள், வயதுச் சான்றுக்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். 14 வயது அணிக்கு 01.09.2006 அல்லது அதற்குப் பிறகும், 16 வயது அணிக்கு 1.9.2004 அல்லது அதற்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டு மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் பி.அசோக் சிகாமணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com