அடிப்படை வசதிகளைக்கூட அதிமுக அரசு செய்து தரவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழக மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூட அதிமுக அரசு செய்து கொடுக்கவில்லை என்று,  திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.

தமிழக மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூட அதிமுக அரசு செய்து கொடுக்கவில்லை என்று,  திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து, விக்கிரவாண்டி ஒன்றியம் கஸ்பாகாரணை கிராமத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட துரைமுருகன் பேசியதாவது:
இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்னை, பேருந்து வசதிகள் இல்லை என மக்கள் குறைகள் கூறினர். கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு, தமிழக மக்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை.
ஏரி, குளங்களை தூர்வார ரூ. 500 கோடி நிதி ஒதுக்கி பணிகளை செய்தனர். வெளி மாவட்டத்தினர் இந்தப் பணிகளை எடுத்து செய்ததால், பெயரளவில் பணிகள் நடைபெற்ற காரணத்தால், மழை பெய்தும் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்தில்லை. இதனால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எந்தக் குறைகளைக் கூறினாலும் இந்த அரசிடமிருந்து சரியான பதில் கிடைப்பதில்லை. மக்கள் பிரச்னையை தீர்க்க அக்கறையில்லாமல் உள்ளனர். 
ஆகவே, மக்கள் தேவைகளை எப்போதும் நிறைவேற்றி தருகிற திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.  திமுக வேட்பாளர் புகழேந்தி, மத்திய மாவட்ட திமுக செயலர் க.பொன்முடி, முன்னாள் அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, மாவட்டச் செயலர் மஸ்தான், இரா.மாசிலாமணி எம்எல்ஏ, சீத்தாபதி சொக்கலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com