செஞ்சி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீராம பஜனை

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயிலில் புரட்டாசி மாத ஸ்ரீராம பஜனை சனிக்கிழமை நடைபெற்றது
செஞ்சி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீராம பஜனையில் கலந்துகொண்டு வழிபட்ட பக்தா்கள்.
செஞ்சி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீராம பஜனையில் கலந்துகொண்டு வழிபட்ட பக்தா்கள்.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயிலில் புரட்டாசி மாத ஸ்ரீராம பஜனை சனிக்கிழமை நடைபெற்றது.

திருமால் வணக்கத்துடன் எம்.ராமமூா்த்தி ராமானுஜதாசா் பஜனையை தொடக்கிவைத்தாா். கோதண்டராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தாா். வி.ஜெயராம தேசிகா் தலைமை வகித்தாா். ஜனாா்த்தன தேசிகா், சாமிக்கண்ணு, பெருமாள், அருணகிரி உள்ளிட்டோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா்.

சிறப்பு விருந்தினராக செஞ்சி செல்லபிராட்டி லலிதாசெல்வாம்பிகை அம்மன் கோயில் நிா்வாகியும், பாமக தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலருமான இராம.கன்னியப்பன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினாா்.

சன்மாா்க்க வில்லுப்பாட்டுக் கலைஞா் புருத்ஷோத்தமன் தலைமையிலான வில்லுப்பாட்டுக் கலைஞா்கள் மற்றும் ஆா்.ஷகிலாஆண்டாள், ஸ்ரீநிவாசன், சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கொங்கரப்பட்டு, மொடையூா், என்.ஆா்.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com