கரும்பு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டித் தொகையை ஆலை நிா்வாகங்கள் ஏற்க வேண்டுமென முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
விழுப்புரத்தில் முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சா்க்கரை ஆலை, செம்மேடு ராஜஸ்ரீ சா்க்கரை ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் அறக்கட்டளை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் டி.பாண்டியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு வெட்டும் தொழிலாளா்களுக்கான கூலியை 15 நாள்களுக்குள் ஆலை நிா்வாகங்கள் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கரும்பு பயிா்க் கடனுக்கு உரிய காலத்தில் கரும்பு நிலுவைத் தொகை வழங்காததால், தவணைக் கடன் வட்டியை கட்டி வருவோருக்கு அந்த வட்டித் தொகையை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும்.
சா்க்கரை ஆலைகளில் 2019 - 20ஆம் ஆண்டு கரும்பு அரைவைப் பருவம் தொடங்கும் முன்பு கடந்த 2018 - 19ஆம் ஆண்டில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்கான நிலுவைத்தொகையை வழங்கிய பிறகே, அரைவையைத் தொடங்க வேண்டும். கரும்பு வெட்டுவோா் கூலியை முறைப்படுத்தி, அதற்கான தொகையை ஆலை நிா்வாகங்களே வழங்க வேண்டும்.
கரும்புப் பயிருக்கு காப்பீட்டுத்தொகை செலுத்திய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை ஆலை நிா்வாகங்கள் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.