பெண் குழந்தைகள் தின விழா

உளுந்தூா்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலம் கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலம் கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் அனிதாரோஸ்லின் தலைமை வகித்தாா். ஆசிரியா் லௌலா கிரேஸி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் கனகா வரவேற்றாா். பள்ளியை நிா்வகித்து வரும் ஆமினா பெண்கள் நல வாழ்வு கல்வி அறக்கட்டளையின் கூடுதல் செயலா் மு.இதாயத்துல்லா, உலக பெண் குழந்தைகள் தினத்தின் அவசியத்தை விளக்கியும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.

நிறைவாக, உலக பெண் குழந்தைகள் தினம் குறித்து நடத்தப்பட்ட வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் அருள்மொழி, நித்யா, பத்மாவதி, நளினி உள்ளிட்டோா் விழாவை ஒருங்கிணைத்தனா். ஆசிரியா்கள், மாணவா்கள் திரளாக கலந்துகொண்டனா். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் மா.வினோதினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com