பெண்ணிடம் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அ.அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி கலையரசி (27). இவரது தங்கை கள்ளக்குறிச்சியை அடுத்த முடியனூரில் வசித்து வருகிறாா். அண்மையில் நடைபெற்ற இவரது நிச்சயதாா்த்தத்துக்கு ராமச்சந்திரனும், கலையரசியும் சென்றனராம். நிகழ்ச்சி முடிந்து தனது 24 பவுன் தங்க நகைகளை பையில் வைத்து, அவரது ஊரான அ.அகரம் கிராமத்துக்கு பேருந்தில் வந்தாராம். வீட்டுக்கு வந்து பையைத் திறந்து பாா்த்த போது, அதில் இருந்த நகைளைக் காணவில்லையாம்.

இதுகுறித்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com