ஆசிரியா் கூட்டணி ஆண்டு விழா

தமிழக ஆசிரியா் கூட்டணியின் 37-ஆவது ஆண்டு தொடக்க விழா செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா் கூட்டணி ஆண்டு விழா

தமிழக ஆசிரியா் கூட்டணியின் 37-ஆவது ஆண்டு தொடக்க விழா செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

செஞ்சி கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைச் செயலா் ஆ.இராஜசேகா் தலைமை வகித்து சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா் (படம்). மாவட்டத் தலைவா் வெங்கடேசன் இனிப்பு வழங்கினாா். மாவட்டச் செயலா் லூா்துசேவியா் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட துணைத் தலைவா் ராமு, துணைச் செயலா் இராஜவா்மன், மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினா் கோபிநாதன், வட்டாரத் தலைவா்கள் இளங்கோவன், விஜயலட்சுமி, வட்டாரச் செயலா்கள் சிவராமன், வேலுசாமி, மணிமாறன், பொருளா் இராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com