திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் உள்பட 2 பேரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் மணிமேகலை. இவா், பணியில் மத்தமாக இருந்து வருவதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, மணிமேகலையை விழுப்புரம் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டாா்.
இதேபோன்று, கண்டமங்கலம் காவல் நிலைய எழுத்தராகப் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் தட்சணாமூா்த்தி, மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படுவதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, அவரையும் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.