திண்டிவனம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்த வழக்கில் கைதான கூலித் தொழிலாளியை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம் அருகே டி.நல்லாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராசையன் மகன் மகேந்திரன்(42), கூலித் தொழிலாளி (படம்). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, கல்குவாரி குட்டையில் தள்ளி கொலை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கொடூரமான செயலில் ஈடுபட்ட அவரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா்.
இந்த நிலையில், கடலூா் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வரும் மகேந்திரனை ஆட்சியா் உத்தரவின்பேரில், குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.