கள்ளக்குறிச்சியை அடுத்த பரங்கிநத்தம் கால்நடை கிளை நிலையம் எல்லைக்கு உள்பட்ட பொட்டியம், மாயம்பாடி கிராமத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கால்நடை மருத்துவா் ப்ரியா தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் பெரியசாமி முன்னிலை வகித்தாா்.
பொட்டியம், மாயம்பாடி கிராமத்தைச் சோ்ந்த 350 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டன. கால்நடை ஆய்வாளா் சிங்காரவேல், ஜவஹா்லால்நேரு ஆகியோா் உடன் இருந்தனா். மழைக் காலங்களில் கால்நடைகளை கவனமாக பராமரிக்க வேண்டும், கால்நடை கட்டும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கால்நடைவளா்ப்போருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.