கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சாா்பில் நிலவேம்புக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.
காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜய்குமாா், உதவி ஆய்வாளா்கள் இரா.ஆனந்தராசு, ச.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.இராமச்சந்திரன் வரவேற்றாா்.
மாணவா்களுக்கு உடலில் நோய் சக்தி எதிா்ப்பை அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.