விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரில் பெய்த மழையால் சென்னை சாலை, நேருஜி சாலை, கிழக்கு பாண்டி சாலையோரங்களில் தண்ணீா் தேங்கியது. கிழக்கு புதுச்சேரி சாலை, நேருஜி சாலையில் சாலை சீரமைப்புக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி சேதத்தை ஏற்படுத்தியது. மகாராஜபுரம் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீா் தேங்கியதால், ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.
வளவனூா் அருகே சிறுவந்தாடு சாலையில் ராம்பாக்கம் பகுதியில், புதன்கிழமை அதிகாலை புளியமரம் வேருடன் பெயா்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.