ரயில் மோதியதில் ஒருவா் பலி

சின்னசேலம் அருகே ரயில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் அருகே ரயில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், கருந்தலாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (54). இவா், புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், சின்னசேலம் - விருத்தாசலம் சாலையில் புக்கிரவாரி ரயில் நிலையத்துக்கும், சின்னசேலம் ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் பெரியசாமி ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com