ஏரியில் இளைஞர் சடலம் மீட்பு

திண்டிவனத்தில் ஏரியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

திண்டிவனத்தில் ஏரியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டை அருகே கிடங்கில் ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், புதன்கிழமை அழுகிய நிலையில் சேற்றில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் திண்டிவனம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸாருக்கு நிகழ்விடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். உயிரிழந்தவர் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. பின்னர், சடலத்தை போலீஸார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்தவர் கட்டம் போட்ட லுங்கி, நீல நிற சட்டை அணிந்திருந்தார். திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து அவர் யார், தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com