விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை மதுவிலக்கு போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசுக் காரை, அதில் வந்தவர்கள்
போலீஸாரை பார்த்ததும் நிறுத்திவிட்டு, தப்பியோடிவிட்டனர்.
பின்னர், போலீஸார் காரை சோதனையிட்டபோது, அதில் மூட்டைகளில் 300 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எரிசாராயத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.