குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது

சின்னசேலம் அருகே குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.


விழுப்புரம்: சின்னசேலம் அருகே குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சின்னசேலம் அருகேயுள்ள காவியம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் மகன் முருகன்(36). சாராயம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வந்த இவரை கள்ளக்குறிச்சி மது விலக்கு போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இதுபோன்று, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முருகனை போலீஸார் திங்கள்கிழமை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com