கார் மோதியதில் பெண் பலி

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகத்தை அடுத்த பாவந்தூர் கிராமம் கிழக்கு சாலையைச் சேர்ந்த நாகராஜ் மனைவி கொளஞ்சி (45). இவர், தனது வீட்டில் வளர்த்து வரும் 4 மாடுகளின் சாணத்தை வீட்டின் அருகே உள்ள இடத்தில் கொட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், கொளஞ்சி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சம்பவ இடத்துக்கு தியாகதுருகம் போலீஸார் வராததால், ஆத்திரமடைந்த கொளஞ்சியின் உறவினர்கள், பொதுமக்கள் அந்தக் கிராமத்தில் உள்ள தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தச் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு சென்ற தியாகதுருகம் போலீஸார், கொளஞ்சியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, கொளஞ்சி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com