மாநில அளவிலான ஓட்டப் போட்டி: நாஹர் பள்ளி மாணவருக்கு தங்கம்

மாநில அளவிலான தடகளப் போட்டியில் விழுப்புரம் நாஹர் பள்ளி சிபிஎஸ்இ மாணவர் தங்கப் பதக்கம் வென்றார்.

மாநில அளவிலான தடகளப் போட்டியில் விழுப்புரம் நாஹர் பள்ளி சிபிஎஸ்இ மாணவர் தங்கப் பதக்கம் வென்றார்.
கோவையில் சிபிஎஸ்இ பள்ளிக் குழுமம் சார்பில்,  மாநில அளவிலான 6-வது தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், தமிழ்நாடு, புதுவை, அந்தமான் பகுதிகளைச் சேர்ந்த 350 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 4,500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் நாஹர் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் 2 மாணவர் எஸ்.பரத் 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அவரை பள்ளித் தாளாளர் உமாமகேஸ்வரி, பள்ளி முதல்வர் மேக்சிஸ் ஹெச்.ரோஸ் மற்றும் விளையாட்டு ஆசிரியர் 
சி.ரஜீஷ், பள்ளி நிர்வாக அலுவலர் ஏஞ்சலின் பிரியா,  அலுவலர் ராமானுஜம் மற்றும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com