கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (21). தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறதாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.22) ஜெயலட்சுமி வீட்டில் சமையல் செய்யவில்லையாம். இதனால் கோபமடைந்த மோகன்ராஜ் ஜெயலட்சுமியிடம் பேசாமல் இருந்துவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி திங்கள்கிழமை விஷத்தை குடித்துவிட்டாராம். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சின்னசேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஜெயலட்சுமி அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பதிக்கு தனிஷ்கா (4), ஹர்னிஷ்கா என்று பிள்ளைகள் உள்ளனர்.