விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுவின் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் என்.நமச்சிவாயம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான செஞ்சி மஸ்தான் சிறப்புரையாற்றினார்.
செஞ்சி ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், தலைமை நிலைய தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, எம்எல்ஏக்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், பொதுக்குழு உறுப்பினர் ரமணன், வழக்குரைஞர் மணிவண்ணன், அரங்க.ஏழுமலை, ஒன்றியச் செயலர் மணிமாறன், வல்லம் ஒன்றியச் செயலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற தேர்தல் பணியாற்றுவது, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் வீதம், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்ப்பது, இளைஞர் அணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.