விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,826-ஆக அதிகரித்தது. இதனிடையே, 15 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,628-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 88 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.